2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

செட்டிகுளம் பிரதேச சபைக்கான கொடி, இலட்சினை, கீதம் வெளியிட்டு வைக்கப்பட்டது

Kogilavani   / 2014 ஜூன் 10 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


வவுனியா செட்டிகுளம் பிரதேச சபைக்கான கொடி, இலட்சினை, பிரதேச சைப கீதம் என்பன செவ்வாய்க்கிழமை (10) வெளியிட்டு வைக்கப்பட்து.

பிரதேச சபை வளாகத்தல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆகியோரால் கொடி மற்றும் இலட்சனை என்பன வெளியிட்டு வைக்கப்பட்டன.

இதேவேளை, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதேசசபைக்குரிய கீதத்தை வெளியிட்டு வைத்தார்.

இதன்போது பிரதேச சபை கீதத்தினை எழுதியிருந்த கலாநிதி அகளங்கன் மற்றும் கொடி மற்றும் இலட்சினையை வடிவமைத்திருந்த ச.கோகிலன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கொளரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X