2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கத்திக்குத்தில் இளைஞர் மரணம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 11 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

பளை, தம்பகாமம் பகுதியில் புதன்கிழமை (11) காலை இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற  கைகலப்பில்  கத்திக் குத்துக்கு இலக்காகி  அதேயிடத்தைச்  சேர்ந்த முத்தையா திலீபன் (வயது 30) என்பவர் மரணமடைந்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது,  படுகாயமடைந்த ஒருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில்  கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்; பொலிஸார் கூறினர்.

இதேவேளை, இக்கத்திக் குத்தை மேற்கொண்டதாகக் கூறப்படும் படுகாயமடைந்த நபருடன்; மற்றுமொருவரையும் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

மரணமடைந்த நபருக்கும் படுகாயமடைந்த நபருக்குமிடையில் பணக் கொடுக்கல், வாங்கல் விடயத்திலிருந்த பிரச்சினை இரு குழுக்களுக்கிடையிலான  கைகலப்பாக மாறி கத்திக்குத்து இடம்பெற்றதென்று  ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X