2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

திருட்டு மின்சாரம் பெற்றவர்களுக்குப் பிணை

Menaka Mookandi   / 2014 ஜூன் 11 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

நெல்லியடிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் திருட்டு மின்சாரம் பெற்ற 8பேரையும் தலா 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கே.கஜநிதிபாலன், நேற்று செவ்வாய்க்கிழமை (10) உத்தரவிட்டார். அத்துடன், மேற்படி வழக்கினை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

நெல்லியடிப் பொலிஸாரும் மின்சார சபையினரும் இணைந்து திங்கட்கிழமை (09) இரவு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், கரணவாய்ப் பகுதியினைச் சேர்ந்த 3 பேரும், நெல்லியடி கிழக்கு (இராஜ கிராமம்) பகுதியினைச் சேர்ந்த 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

மேற்குறித்த 8பேரையும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (10) ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X