2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மகனின் மர்ம உறுப்பினை வெட்டிய தந்தைக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2014 ஜூன் 12 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.ஈவினை கிழக்குப் பகுதியில், தனது மகனின் மர்ம உறுப்பை உடைந்த போத்தலினால் வெட்டிய தந்தையினை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ்மகா தேவா நேற்று புதன்கிழமை (11) உத்தரவிட்டார்.

குறித்த நபரை சுன்னாகம் பொலிஸார் நேற்று (11) மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய வேளையிலே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

குறித்த நபர் கடந்த திங்கட்கிழமை (09) தனது மகனின் மர்ம உறுப்பினை உடைந்த பியர் போத்தலினால் வெட்டினார் என்ற குற்றச்சாட்டில் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

இதில் படுகாயமடைந்த அவரது மகன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.
தந்தை வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதினை அறிந்த மகன் அதனைத் தட்டிக் கேட்டவேளை ஆத்திரமடைந்த தந்தை பியர் போத்தலினை உடைத்து மகனின் மர்ம உறுப்பினை வெட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X