2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

போயா தினத்தில் மது விற்றவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூன் 12 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். கொக்குவில் புகையிரத நிலைய வீதியிலுள்ள வீடொன்றில் போயா தினமான இன்று வியாழக்கிழமை மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறப்படும்  ஒருவைர கைதுசெய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், அவரிடமிருந்து 02 மதுபானப் போத்தல்களையும்  கைப்பற்றியுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் போயா தினத்தில் அனுமதியின்றி அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்வதாக  பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று சந்தேக  நபரை கைதுசெய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X