2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

நகைகளை திருடியவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூன் 13 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ். அச்சுவேலி தெற்கு முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்து  இன்று வெள்ளிக்கிழமை  அதிகாலை 15 ½ பவுண் தங்கநகைகளைத் திருடியதாகக் கூறப்படும்  வவுனியாவைச் சேர்ந்த ஒருவரை கைதுசெய்ததாக  அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வீட்டிலுள்ளவர்கள் காற்றோட்டத்திற்காக ஜன்னல்களை திறந்துவிட்டு உறங்கியுள்ளனர். இந்நிலையில்,  ஜன்னல் வழியாக  திறப்பை  எடுத்த திருடன், கதவைத் திறந்துகொண்டு சென்று  சாமி அறையில் வைக்கப்பட்டிருந்த தாலிக்கொடி, சங்கிலி,  மோதிரங்கள் உள்ளிட்டவற்றை  திருடுவதை இவ்வீட்டிலுள்ளவர்கள் கண்டு கூக்கிரலிட்டனர்.  இந்நிலையில்,  திருடன் மதில் பாய்ந்து ஓடியுள்ளான்.

இத்திருட்டு தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து  மோப்பநாயுடன் அங்கு வந்த பொலிஸார், விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில்,  இவ்வீட்டிலிருந்து 300 மீற்றர் தூரத்திலுள்ள மற்றுமொரு வீடொன்றில் சந்தேக நபரை கைதுசெய்தனர்.

சந்தேக நபரிடம்  மேற்கொண்ட விசாரணையின்போது, திருடிய நகைகளை இவ்வீட்டின் அருகிலுள்ள வளவில்; போட்டுவிட்டு ஓடியதாகவும் சந்தேக நபர்  வவுனியாவிலிருந்து உறவினர் வீட்டில் வந்து தங்கியிருந்தமையும் தெரியவந்தது. 

பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X