2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

இந்திய புடைவை வியாபாரிகள் இருவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 17 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

சுற்றுலா விஸாவில் வந்து யாழ். தெல்லிப்பழை பகுதியில் புடைவை வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில்  கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில்  நேற்று திங்கட்கிழமை (16) ஆஜர்படுத்தப்பட்ட இந்திய புடைவை வியாபாரிகள் இருவரையும்  எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா  உத்தரவிட்டார்.

தமிழ்நாட்டின்  இராமநாதபுரத்தைச்  சேர்ந்த தாயான அழகர்சாமி ராஜாஅம்பாள் (வயது 44) மற்றும் அவரது மகனான அழகர்சாமி மகேந்திரன் (வயது 23) ஆகியோரை  தெல்லிப்பழை பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (15)  கைதுசெய்த பொலிஸார்,  இவர்களிடமிருந்து புடைவைகள் அடங்கிய 03  பைகளையும்  கைப்பற்றியிருந்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X