2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பிரதேச சபையின் காணியில் கள்ளுத்தவறணை அமைக்கப்படவுள்ளது

Kogilavani   / 2014 ஜூன் 23 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

யாழ். வலிகாம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட யாழ்.கல்லுண்டாய் வீதி காக்கைதீவிலுள்ள காணியில் மானிப்பாய் தெங்கு பனம்பொருள் உற்பத்தி விற்பனை கூட்டுறவுச் சங்கத்தினால் கள்ளுத்தவறணை அமைக்கப்படவுள்ளதாக பிரதேச சபைத் தவிசாளர் சண்முகம் சிவகுமாரன் திங்கட்கிழமை (23) தெரிவித்தார்.

கடந்த காலங்களில் கொல்களமாக இருந்த குறித்த காணியானது பின்னர் கைவிடப்பட்ட நிலையில் இருந்தது.  இந்நிலையில் குறித்த காணியினை தங்களுக்குத் தரும்படி மானிப்பாய் தெங்கு பனம்பொருள் உற்பத்தி விற்பனை கூட்டுறவுச் சங்கம், எமது (வலி.தென்மேற்கு) பிரதேச சபையிடம் கோரிக்கை முன்வைத்திருந்தது.

அந்தக் கோரிக்கையினைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட பிரதேச சபை, உள்ளூராட்சி உதவி ஆணையாளரின் அனுமதியுடன் குறித்த காணியினை மானிப்பாய் தெங்கு பனம்பொருள் உற்பத்தி விற்பனை கூட்டுறவுச் சங்கத்திற்கு கொடுப்பதற்கு முன்வந்துள்ளோம்.  இதற்கமைய அந்தக் காணியில் சங்கத்தின் கள்ளுத்தவறணை அமைக்கப்படவுள்ளது"   என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .