2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

விபத்தில் வயோதிப பெண் பலி

Kanagaraj   / 2014 ஜூன் 23 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -செல்வநாயகம் கபிலன்

யாழ் அராலி பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை (22) இடம் பெற்ற வீதி விபத்தில் வயோதிப பெண்னொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் வீதியைக் கடக்க முற்பட்ட போது தனியார் பேருந்து மோதியதில் படுகாயமடைந்ததாகவும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாகவும் வட்டுக்கோட்டை போக்குவரத்துப் பொலிஸார் திங்கட்கிழமை (23) தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண், அராலி வடக்கு, வட்டுக்கோட்டையை சேர்ந்த கிருஸ்ணன் தங்கம்மா (80) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .