2025 ஜூலை 02, புதன்கிழமை

பகிரங்க பிடியாணை : நால்வருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2014 ஜூன் 23 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பல்வேறு குற்றச் செயல்களில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணைகளின் போது நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காத நால்வரை எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் இன்று திங்கட்கிழமை (23) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நபர்கள், கசிப்பு உற்பத்தி, கோடா வைத்திருந்தமை, கைகலப்பில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றங்களில் கிளிநொச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து இவர்கள் தொடர்பான வழக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, இவர்கள் மன்றிற்கு 3 தடவைகளுக்கு மேல் சமூகமளிக்கவில்லை.

இதனையடுத்து, குறித்த நான்கு நபர்களுக்கும் எதிராக கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் பகிரங்க பிடியாணையினைப் பிறப்பித்திருந்தார்.

அதற்கமைய மேற்படி நபர்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) கைது செய்த கிளிநொச்சி பொலிஸார், தொடர்ந்து குறித்த நபர்களை இன்று (23) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினார்கள்.

இதன்போதே குறித்த நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .