2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

முன்பள்ளிகளுக்கு உபகரணம் வழங்கும் நிகழ்வு

Super User   / 2014 ஜூன் 26 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


யாழ்.அனலை சமூகநல மன்றத்தினால் அனலைத்தீவினைச் சேர்ந்த 4 முன்பள்ளிகளுக்கு 64,000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அனலைதீவு மனோன்மணி அம்மன் ஆலய திறந்தவெளி மண்டபத்தில் புதன்கிழமை (25) இடம்பெற்றது.

அனலைதீவினைச் சேர்ந்த அருணோதயா முன்பள்ளி, ஐயனார் முன்பள்ளி, ஸ்ரீபாலமுருகன் முன்பள்ளி, நாவலர் முன்பள்ளி ஆகிய முன்பள்ளிகளுக்கு தலா 16,000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கிராம அலுவலர் எஸ்.வடிவழகையன், பிரதேச சபை முன்பள்ளிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் திருமதி. பெர்னான்டோ பாரதி, அனலை சமூகநல மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிடட்ட பலர் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .