2025 ஜூலை 02, புதன்கிழமை

மாடு வெட்டியவர் கைது

Kanagaraj   / 2014 ஜூன் 30 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். அச்சுவேலி வடக்குப் பகுதியில், சட்டவிரோதமான முறையில் மாட்டொன்றை இறைச்சியாக்கிய 33 வயதுடைய நபரை இன்று திங்கட்கிழமை (30) காலை கைது செய்ததாக அச்சுவேலிப் பொலிஸ் நிலைய குற்ற ஒழிப்புப் பொலிஸ் பொறுப்பதிகாரி கே.என்.சி.பிரதீப் செனவரத்தன தெரிவித்தார்.

தமக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்குச் சென்று குறித்த நபரைக் கைது செய்ததுடன், இறைச்சியினையும் மீட்டதாக அவர் தெரிவித்தார்.

குறித்த நபரினை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .