2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பாலைமரக் கட்டைகளுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூலை 08 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


- செல்வநாயகம் கபிலன்


அனுமதிப்பத்திரமின்றி அரியப்பட்ட பாலைமரக் கட்டைகளை  வாகனமொன்றில் கொண்டுசென்றதாகக் கூறப்படும் இருவரை புத்தூர்ச் சந்தியில் திங்கட்கிழமை (07) இரவு கைதுசெய்ததாக அச்சுவேலி போக்குவரத்து பொலிஸார் செவ்வாய்க்கிழமை (08) தெரிவித்தனர்.

புத்தூர் கிழக்கு மற்றும் கோவிலாக்கண்டிப் பகுதிகளைச்  சேர்ந்த 23 மற்றும் 19 வயதுடைய இவர்கள் அச்சுவேலியிலிருந்து நீர்வேலிப் பகுதியிலுள்ள மரக்காலையொன்றுக்கு இம்மரக்கட்டைகளை கொண்டு சென்றுகொண்டிருந்தபோது,   வீதி போக்குவரத்து கடமையிலிருந்த பொலிஸார்  இடைமறித்துச் சோதனையிட்டனர்.  இதன்போது, இம்மரக்கட்டைகளை  கண்டுபிடித்ததாகவும் பொலிஸார் கூறினர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .