2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஒருவர் வெட்டிக்கொலை: மூவருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2014 ஜூலை 09 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான்

யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் வைத்து இளைஞர் ஒருவர் சனிக்கிழமை (05) இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டதாகக் கைது செய்யப்பட்டவர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம், நேற்று செவ்வாய்க்கிழமை (08) உத்தரவிட்டார்.

சாவகச்சேரி பொலிஸாரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்யப்பட்ட மீசாலையைச் சேர்ந்த மேற்படி மூன்று நபர்களையும் நேற்று செவ்வாய்க்கிழமை (08) நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார்.

 மேற்படி வாள்வெட்டுச் சம்பவத்தில் அல்லாரையைச் சேர்ந்த என்.அன்பழகன் (26) என்பவர் உயிரிழந்ததுடன், மேலும் 8 பேர் படுகாயமடைந்து சாவகச்சேரி ஆதார, யாழ்.போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

 மீசாலையில் ஆலயத்திருவிழாவொன்றில் சனிக்கிழமை (05) மாலை இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பின் எதிரொலியாகவே இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .