2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

தங்குகூசி வலை பயன்படுத்தியவர்களுக்கு தண்டம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 16 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, நாச்சிக்குடா கடற்பரப்பில், தடை செய்யப்பட்ட தங்குகூசி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவருக்கு தலா 3000 ரூபா தண்டம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஜ.வாகப்தீன் இன்று புதன்கிழமை (16) உத்தரவிட்டார்.

கிளிநொச்சி கடற்றொழில் நீரியல்வளத்துறையினரால் மே மாதம் 6ஆம் திகதி கைது செய்யப்பட்ட மேற்படி நபர்களுக்கு எதிராக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
 
மேற்படி வழக்கு இன்று புதன்கிழமை (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இருவரும் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டதை அடுத்து அதிகுறைந்தபட்ச தண்டனையாக தலா 3000 ரூபா தண்டம் விதித்துத் தீர்ப்பளிப்பதாக நீதவான் கூறினார்.

மேலும், இவ்வாறான செயல்களின் மீண்டும் ஈடுபட்டால், அதிகபட்ச தண்டம் விதிக்கப்படும் எனவும் நீதவான் எச்சரிக்கை செய்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .