2025 ஜூலை 05, சனிக்கிழமை

நான்கு இந்திய மீனவர்கள் விடுதலை

Menaka Mookandi   / 2014 ஜூலை 17 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

யாழ்., நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களையும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தரவிற்கமைய ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் இன்று வியாழக்கிழமை (17) விடுவித்தார்.

இவர்களை யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறையினரிடமிருந்து பொறுப்பேற்றுக்கொண்ட இந்தியத் துணைத் தூதரகத்தினர் இலங்கை கடற்படையினர் ஊடாக இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி இந்திய தமிழகம் இராமேஸ்வரன் பகுதியிலிருந்து 1 படகில் வந்த மேற்படி 4 மீனவர்களையும் கடந்த 10ஆம் திகதி இரவு கடற்படையினர் கைது செய்து, யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து, இவர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய வேளையில், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் விளக்கமறியலில் வைத்து உத்தரவிட்டடிருந்தார். இந்நிலையில் மேற்படி மீனவர்கள் இன்று (17) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .