2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இந்திய மீனவர்கள் ஐவருக்கு விளக்கமறியலில்

Thipaan   / 2014 ஜூலை 19 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ். நயினாதீவு கடற்கரையில் வியாழக்கிழமை (17) காலை நீந்திக் கரையொதுங்கிய இந்திய மீனவர்கள் ஐவரையும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், நேற்று வெள்ளிக்கிழமை (18) உத்தரவிட்டார்.

படகுகள் எதுவும் இன்றிய நிலையில் நீந்திக் கரைசேர்ந்த மேற்படி மீனவர்களை கைது செய்த கடற்படையினர் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.

மேற்படி மீனவர்கள் தாங்கள் இராமேஸ்வரம் பகுதியிலிருந்து வந்ததாகவும், தங்கள் படகுகள் கடலில் மூழ்கியதாகத் தெரிவித்ததாகவும் ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்ந்து மேற்படி மீனவர்களை இன்று (18) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய வேளையிலே நீதவான் விளக்கமறியலில் வைத்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X