2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஊடகங்கள் சரியான தகவல்களை வழங்குகின்றன: யாழ். மாவட்ட செயலர்

Thipaan   / 2014 ஜூலை 19 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

யாழ். மாவட்ட ஊடகங்கள் உரிய தகவல்களை உரிய முறையில் பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதில் அதிக அக்கறை எடுத்து செயல்படுவதாக, யாழ்.மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் இன்று (19) தெரிவித்தார்.

இலங்கை பத்திரிகைப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு இன்று சனிக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில், 

நான் மட்டக்களப்பில் அரசாங்க அதிபராக இருந்த வேளையில் இலங்கை பத்திரிகைப் பேரவையினால் நடத்தப்பட்;ட ஊடகவியலாளர்களுக்கான  செயலமர்வில் கலந்துகொண்டேன்.

தற்போது இரண்டாம் தடவையாக யாழ். மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் கலந்துகொள்கின்றமை மகிழ்ச்சியானதாகவுள்ளது.
நவீன உலகில் ஊடகத்துறையின் வளர்ச்சி ஊடாக எதனையும் நன்கு அறிந்து செயல்படக் கூடிய சந்தர்ப்பங்கள் தற்போது காணப்படுகின்றன. யாழ் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான இந்தப் பயிற்சிப்பட்டறை யாழ் மாவட்ட ஊடகவியலாளர்களை மேலும் வளப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

எங்களுடைய பணிகள் மேலும் அபிவிருத்தி அடையவும் மக்களுக்கான விபரங்களை எடுத்துக்கூறுவதிலும் இது நல்லதொரு வழிகாட்டியாகவும் பயனுடையதாகவும் அமையும். இதனை ஊடகவியலாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .