2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஐந்து லட்சம் ரூபாய் பெறுமதியான நகை, பணம் கொள்ளை

Gavitha   / 2014 ஜூலை 20 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்.சுன்னாகம் பழைய பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள வீடொன்றில், சனிக்கிழமை (19) நகைகள் மற்றும் பணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (20) தெரிவித்தனர்.

வீட்டின் ஜன்னல்களை உடைத்து உள்நுழைந்து கொள்ளையர்கள், அங்கிருந்த 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றினைத் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

வீட்டின் உரிமையாளர்கள் உறவினர் வீடொன்றிற்குச் சென்றிருந்த வேளையிலே, இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக சுன்னாகம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .