2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மரக்காலையில் திருட்டு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 28 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். சுன்னாகம் - கந்தரோடை வீதியில் அமைந்துள்ள மரக்காலையொன்றிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பனைமரச் சிலாகைகளும் முதிரைமரக் குற்றிகளும்  நேற்றுமுன்தினம்  சனிக்கிழமை (26) இரவு திருட்டுப் போயுள்ளது என்று அம்மரக்காலை  உரிமையாளர் நேற்று  ஞாயிற்றுக்கிழமை (27) முறைப்பாடு செய்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

மரக்காலையும் அருகிலிருந்த பாத்திர விற்பனை நிலையமும் உடைக்கப்பட்ட நிலையில், மரக்காலையில் திருட்டுப் போயுள்ளன. இருப்பினும்,  பாத்திர விற்பனை நிலையத்தில் திருட்டுப் போகவில்லையெனவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .