2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வர்த்தகர்களுக்கு தண்டம் விதிப்பு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பொ.சோபிகா

யாழ். மாவட்டத்திலுள்ள 45 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக, யாழ். மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களால் கடந்த ஜுலை மாதம் 2 இலட்சத்து 850 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக, யாழ்.மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினர் வெள்ளிக்கிழமை (01) தெரிவித்தனர்.

மேற்படி அதிகார சபை அதிகாரிகளால், யாழ். மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் கடந்த ஜுலை மாதம் சோதனைக்குட்படுத்தப்படன.
இதன்போது, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தாமை போன்ற குற்றங்களைச் செய்த 45 வர்த்தகர்கள் அடையாளங் காணப்பட்டனர்.

தொடர்ந்து, மேற்படி வர்த்தகர்களுக்;கெதிராக அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டன.
இதன்போது, மேற்படி வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து, நீதிமன்றங்கள் தண்டங்கள் விதித்துத் தீர்ப்பளித்ததாக சபையினர் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .