2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தந்தையை வாளால் வெட்டிய மகனுக்கு வலைவீச்சு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 03 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா, யோ.வித்தியா

யாழ்ப்பாணம், மூளாய், தொல்புரம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், தனது மகனின் வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

செல்லையா ராசலிங்கம் (வயது 45) என்பவரே சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் சீட்டுக் காசு தொடர்பாக எழுந்த தகராற்றிலேயே இந்த வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதுவரையில் மகன் கைது செய்யப்படவில்லை எனவும் வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .