2025 ஜூலை 07, திங்கட்கிழமை

விபத்து : வயோதிப பெண் படுகாயம்

George   / 2014 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ். வண்ணார்பண்ணை சிவன் கோவிலுக்கு அருகில், வீதியில் நடந்து சென்ற பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில், அப் பெண் படுகாயமடைந்துள்ளதுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை (04) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

மானிப்பாயைச் சேர்ந்த ச.அருள்சோதி (வயது 67) என்பவரே இவ்வாறு விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த பெண் மீது மோதிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை கைது செய்துள்ளதுடன் மேலதிக  விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .