2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

தங்குகூசி வலைகளுடன் நான்கு மீனவர்கள் கைது

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 07 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ்.வேலணைக் கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட தங்குகூசி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு மீனவர்களை புதன்கிழமை (06) கைது செய்ததாக யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறைப் பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி வியாழக்கிழமை (07) தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து, 4 இலட்;சம் ரூபா பெறுமதியான தங்குகூசி வலைகளையும் மீட்டதாக அவர் தெரிவித்தனர்.

தங்குகூசி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுகின்றனர் என தமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே அவ்விடத்திற்குச் சென்று மேற்படி நான்கு மீனவர்களையும் கைது செய்ததாக தெரிவித்தார்.

தொடர்ந்து, மேற்படி 4 மீனவர்களையும் வியாழக்கிழமை (07) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .