2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி மணல் கொண்டு சென்றவர் கைது

Thipaan   / 2014 ஓகஸ்ட் 07 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ். வரணி நாவற்காட்டு பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச் சென்ற இடைக்குறிச்சிப் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சந்தேகநபரை இன்று வியாழக்கிழமை (07) கைது செய்ததாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

தமக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்படி சந்தேகநபரைக் கைது செய்ததாகவும், உழவு இயந்திரத்தைப் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்ந்து மேற்படி நபரை நாளை வெள்ளிக்கிழமை (08) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .