2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பாலை மரக்குற்றிகளை கடத்தியவருக்குத் தண்டம்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 07 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி சேவியர்கடைப் பகுதிப் பகுதியில் உழவு இயந்திரத்தில் அனுமதிப்பத்திரமின்றி 36 ஆயிரத்து 746 ரூபா பெறுமதியான பாலை மரக்குற்றிகளைக் கடத்திச் சென்றவருக்கு 10 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வாகப்தீன் வியாழக்கிழமை (07) உத்தரவிட்டார்.

அத்துடன், மரக்குற்றிகளை பறிமுதல் செய்து அரசுடமையாக்கும்படியும் நீதவான் உத்தரவிட்டார்.

மேற்படி நபர், அனுமதிப்பத்திரமின்றி பாலை மரக்குற்றிகளைக் கடத்திச் செல்கின்றார் என, கிளிநொச்சி வட்டார வனவள பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலே மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டார்.

தொடர்ந்து மேற்படி நபர் வியாழக்கிழமை (07) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .