2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மனைவியை தாக்கிய நபருக்கு பிணை

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 07 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பூநகரிப் பகுதியில் தனது மனைவியை தாக்கிக் காயப்படுத்திய சந்தேகநபரை 25 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் வியாழக்கிழமை (07) உத்தரவிட்டார்.

அத்துடன், வழக்கினை செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.

மேற்படி சந்தேகநபர் கடந்த சனிக்கிழமை (02) தனது மனைவியை தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த மனைவி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட பூநகரிப் பொலிஸார் மேற்படி சந்தேகநபரைக் கைதுசெய்ததுடன் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கு வியாழக்கிழமை (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதவான் மேற்படி நபருக்கு பிணை வழங்கினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .