2025 ஜூலை 07, திங்கட்கிழமை

அதிக விலையில் அரிசி விற்பனை தொடர்பில் முறைப்பாடுகள்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 07 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா, பொ.சோபிகா

யாழ். மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்களில் அரிசிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ். பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினர் வியாழக்கிழமை (07) தெரிவித்தனர்.

மேற்படி முறைப்பாடு தொடர்பாக யாழ்.மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகத்தின், ஆலோசனைக்கு அமைவாக வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சபையினர் தெரிவித்தனர்.

யாழ். மாவட்ட அரச அதிபரின் உத்தரவின் படி, சம்பா அரிசி 77 ரூபாய், சிவப்பு நாடு 66 ரூபாய், வெள்ளைநாடு 68 ரூபாய், சிவப்பு பச்சை 60 ரூபாய், வெள்ளை பச்சை 66 ரூபாய் என்ற விலை அடிப்படையில் விற்பனை செய்யப்படவேண்டும்.

பல வகை சிவப்பு நாடு அரிசி இருப்பதனால் அவற்றிற்கு கட்டுப்பாடு விதிப்பதில் தாமதம் இருக்கின்றது. அது தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வரும்வரையில், பல வகையான சிவப்பு நாடு அரிசிகளினை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் கட்டாயமாக 66 ரூபாய் சிவப்பு நாடு அரிசியினையும் விற்பனை செய்ய வேண்டும் என அதிகார சபையினர் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .