2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கள்ளநோட்டு வைத்திருந்தவருக்குப் பிணை

Gavitha   / 2014 ஓகஸ்ட் 09 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு வைத்திருந்ததாக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 25 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் வெள்ளிக்கிழமை (08) உத்தரவிட்டார்.

அத்துடன், மேற்படி வழக்கினை செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி வரையிலும் ஒத்திவைத்தார்.

மேற்படி சந்தேகநபர், கைதடியிலுள்ள உணவகம் ஒன்றில், 1000 ரூபா கள்ளநோட்டினைக் கொடுத்து வெள்ளிக்கிழமை (08) பொருட்கள் வாங்கியுள்ளார். சந்தேகநபர் கொடுத்த தாள் மீது சந்தேகம் கொண்ட உணவக உரிமையாளர் உடனடியாக சாவகச்சேரி பொலிஸாரினைத் தொடர்புகொண்டு கூறியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மேற்படி யாழ். அரியாலைச் சேர்ந்த சந்தேக நபரை கைது செய்து, சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (08) மாலை ஆஜர்ப்படுத்தினர்.

இதன்போதே, நீதவான் பிணையில் செல்ல அனுமதியளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .