2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற மூவர் கைது

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 10 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சட்டவிரோத மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம், சிறுப்பிட்டி பகுதியினைச் சேர்ந்த பெண்ணொருவர் உட்பட மூவர் சனிக்கிழமை (09) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மின்சாரம் பெறுபவர்களைக் பிடிப்பதற்கான நடவடிக்கையில் சுன்னாகம் மின்சார நிலையத்தினைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து அச்சுவேலிப் பொலிஸ் நிலையப் பொலிஸாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்போது, நேற்று சனிக்கிழமை (09) சிறுப்பிட்டிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், மின்மானியில் கம்பி செருகிய ஒருவரும், திருட்டுத்தனமாக மின்சாரம் பெற்ற இருவருமாக மொத்தம் மூவர் கைது செய்யப்பட்டனர்.

மூவருக்கும் எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .