2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத மின்சாரம் பெற்ற பெண்களுக்கு பிணை

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 12 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு பெண்களையும் தலா 1 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல யாழ்;.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் திங்கட்கிழமை (11) உத்தரவிட்டார்.

அத்துடன், மேற்படி வழக்கை செப்ரம்பர் மாதம் 4ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவத்தார்.

சுன்னாகம் மின்சார சபையினரும் கோப்பாய் பொலிஸாரும் இணைந்து கோப்பாய்ப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சோதனை நடவடிக்கையில் திங்கட்கிழமை (11) ஈடுபட்டனர்.

இதன்போது, திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரும், நீர்வேலி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து, மேற்படி இரு பெண்களும் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவானின் வாசஸ்தலத்தில் திங்கட்கிழமை (11) ஆஜர்ப்படுத்தப்பட்டனர் எனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .