2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தொலைபேசியில் ஆபாசப்படம் பார்த்த இளைஞன் கைது

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 14 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.கொடிகாமம் பஸ் நிலையத்தில் வைத்து தொலைபேசியில் ஆபாசப்படம் பார்த்த 21 வயது இளைஞனை புதன்கிழமை (13) மாலை கைதுசெய்ததாக கொடிகாமம் பொலிஸார் வியாழக்கிழமை (14) தெரிவித்தனர்.

அச்சுவேலி ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பஸ் நிலையத்தில் நின்று ஆபாசப்படம் பார்த்துக்கொண்டிருந்த போது, சிவில் உடையில் இருந்த பொலிஸார் மேற்படி இனைஞனைக் கைதுசெய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X