2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

குழந்தையை தாக்கிய தந்தைக்கு மனநோய் சிகிச்சை

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 19 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராஜகிராமம் பகுதியில் கடந்த 9ஆம் திகதி குழந்தையொன்றை தலைகீழாகப் பிடித்து தாக்கியதுடன், மனைவியையும் கடுமையாகத் தாக்கிய குடும்பஸ்தரை தெல்லிப்பளை மனநோய் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கும்படி யாழ்.சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி செவ்வாய்க்கிழமை (19) உத்தரவிட்டார்.

அத்துடன், மேற்படி சந்தேகநபரை 26ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கவும் நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.

மேற்படி சம்பவத்தில் இராஜேஸ்வரன் தமிழ்ச்செல்வி (வயது 27) மற்றும் அவரது குழந்தை ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்படி சந்தேகநபர் கடந்த 11ஆம் திகதி இராஜகிராமம் பகுதியில் வைத்து நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .