2025 ஜூலை 09, புதன்கிழமை

வீதி விதிமுறைகளை மீறியவர்களுக்கு தண்டம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 20 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் வீதி விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்திய 8 பேருக்கு 44 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் இன்று புதன்கிழமை (20) தீர்ப்பளித்தார்.

சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய 2 பேருக்குத் தலா 3000 ரூபாவும் சாரதி அனுமதிப்பத்திரம், காப்புறுதிப்பத்திரம் ஆகிய இல்லாமல் மோட்டார் சைக்கிள் செலுத்திய 5 பேருக்குத் தலா 6000 ரூபாவும், சாரதி அனுமதிப்பத்திரம், காப்புறுதிப்பத்திரமின்றி மற்றும் வரிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய ஒருவருக்கு 8,500 ரூபாவும் தண்டமாக விதிக்கப்பட்டது.

மேற்படி எட்டுப்பேரும் கடந்த வாரத்தில், பிடிக்கப்பட்டு, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து மேற்படி நபர்களுக்கு எதிராக சாவக்சேரி நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

மேற்படி வழக்குகள் புதன்கிழமை (20) விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு தீர்ப்பளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .