2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மணல் அகழ்ந்தவர்களுக்குத் தண்டம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 21 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ். வரணி இடைக்குறிஞ்சிப் பகுதியில் அனுமதியின்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவருக்குத் தலா 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் புதன்கிழமை (20) உத்தரவிட்டார்.

மேற்படி நபர்கள் செவ்வாய்க்கிழமை (19) மணல் அகழ்ந்து கொண்டிருக்கும் போது, கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட மேற்படி நபர்களுக்கு எதிராக பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

மேற்படி வழக்கு புதன்கிழமை (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மூவரும் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து, நீதவான் தண்டம் விதித்துத் தீர்ப்பளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .