2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சபைக்கு சைக்கிளில் சென்றார் அனந்தி

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 21 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த், எஸ்.ஜெகநாதன்


வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் சபை அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக சைக்கிளில் பயணித்தார். 

வடமாகாண சபையின் மாதாந்தக் கூட்டத்தொடர் (14 ஆவது) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் இன்று வியாழக்கிழமை (21)  இடம்பெறுகின்றது.

இந்த அமர்வில் கலந்துகொள்வதற்காகவே அனந்தி, சுழிபுரத்திலுள்ள தனது வீட்டிலிருந்து சைக்கிளில் வடமாகாண சபைக்கு பயணித்தார். 

தமது வேலைத்திட்டங்களுக்கு வழங்கப்படும் எரிபொருளுக்கான நிதி போதாது என்றும் இதனை சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு உணர்த்தும் வகையிலேயே சைக்கிளில் பயணித்ததாக அனந்தி கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .