2025 ஜூலை 09, புதன்கிழமை

நீதிமன்ற வளாகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நால்வருக்கு விளக்கமறியல்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 23 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ். சாவகச்சேரி நீதிமன்ற வளாகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நால்வரையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், வெள்ளிக்கிழமை (22) உத்தரவிட்டார்.

காணி வழக்குத் தொடர்பில் நீதிமன்றத்திற்கு வெள்ளிக்கிழமை (22) வருகை தந்த இரு தரப்பைச் சேர்ந்த நால்வரும் நீதிமன்ற வளாகத்தில் வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து நால்வரையும் கைது செய்யும் படி பொலிஸாருக்கு  நீதவான் உத்தரவிட்டார்.

அதனையடுத்து, குறித்த நால்வரையும் கைது செய்த சாவகச்சேரி பொலிஸார், நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .