2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கஞ்சாவுடன் அறுவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ். சாட்டிக் கடற்கரையில் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும்; கொழும்பைச் சேர்ந்த 06 பேரை நேற்று  ஞாயிற்றுக்கிழமை (24) மாலை கைதுசெய்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் இன்று திங்கட்கிழமை (25) தெரிவித்தனர்.

24,  37 வயதுகளில் இருவரும்  27, 28  வயதுகளில் 04 பேரும் கைதுசெய்யப்பட்டதுடன், இவர்களிடமிருந்து 25 கிராம் கஞ்சாவை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா வந்த இவர்கள், மதுபானம் அருந்திவிட்டு கடற்கரையில் நின்று தங்களுக்குள் சண்டையிட்டுள்ளனர். இந்த நிலையில் அங்கு சென்ற பொலிஸார், இவர்களின் வாகனத்தைச் சோதனையிட்டபோது வாகனத்துக்குள் கஞ்சா இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .