2025 ஜூலை 09, புதன்கிழமை

சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர் கைது

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், துன்னாலை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 47 வயது சந்தேகநபர் ஒருவரை இன்று திங்கட்கிழமை (25) அதிகாலை கைது செய்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.  துன்னாலைப் பகுதியில் வீதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரே அவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், அந்நபரிடமிருந்து குறடு, சுத்தியல் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேற்படி நபரை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .