2025 ஜூலை 09, புதன்கிழமை

குழு மோதலில் ஒருவர் படுகாயம்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 27 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.வல்வெட்டித்துறைப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் செவ்வாய்க்கிழமை (26) இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் படுகாயமடைந்து ஊறணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் புதன்கிழமை (27) தெரிவித்தனர்.

பொலிகண்டிப் பகுதியைச் சேர்ந்த எஸ்.தெய்வேந்திரம் (வயது 34) என்பவரே இம்மோதலில் படுகாயமடைந்துள்ளார்.

இரண்டு  குழுக்களுக்கிடையில் நீண்டகாலமாக இருந்து வந்த வாய்த்தர்க்கமே, இந்தக் குழு மோதலுக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .