2025 ஜூலை 10, வியாழக்கிழமை

அரிசி மூடைகள் திருடிய மூவர் கைது

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 04 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, நாரந்தனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அரிசி மூடைகளை சனிக்கிழமை (30) இரவு திருடிய சந்தேகத்தில் நாரந்தனை பகுதியைச் சேர்ந்த மூன்று பேர், புதன்கிழமை (03) மாலை கைது செய்யப்பட்டதாக ஊர்காவற்றுறை பொலிஸார் வியாழக்கிழமை (04) தெரிவித்தனர்.

மேற்படி சங்கக்கடையின் பூட்டை உடைத்து உள்நுழைந்து, அங்கிருந்து 50 கிலோ கிராம் நிறையுடைய 4 அரிசி மூடைகள், மற்றும் 25 கிலோ நிறையுடைய 1 அரிசி மூடை ஆகியனவே திருடப்பட்டிருந்தன.
 
திருடிய அரிசி மூடைகளை மேற்படி சந்தேகநபர்கள் விற்பனை செய்யும் போது, பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனடிப்படையில் 22, 28 மற்றும் 32 வயதுடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .