2025 ஜூலை 10, வியாழக்கிழமை

கசிப்பு வைத்திருந்தவர்களுக்கு அபராதம்

Gavitha   / 2014 செப்டெம்பர் 06 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சியில் கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவருக்கு 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் வெள்ளிக்கிழமை (05) உத்தரவிட்டார்.

கிளிநொச்சி பகுதியில் 5 ½ போத்தல் கசிப்புடன் புதன்கிழமை (03) கைது செய்யப்பட்டவருக்கு 80 ஆயிரம் ரூபாய் அபராதமும், வட்டக்கச்சி பகுதியில் 1 போத்தல் கசிப்புடன் ஞாயிற்றுக்கிழமை (31) கைது செய்யப்பட்டவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் நீதவான் விதித்தார்.

மேற்படி நபர்களை கைது செய்த கிளிநொச்சி பொலிஸார், வெள்ளிக்கிழமை (05) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் அபராதம் விதித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .