2025 ஜூலை 12, சனிக்கிழமை

வீதியில் எரிந்த நிலையில் கிடந்த பெண், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு

Thipaan   / 2014 செப்டெம்பர் 09 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  ற.றஜீவன்

யாழ். வடமராட்சி தம்பசிவம் சந்தியில் எரிந்த நிலையில் கிடந்த பெண், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் செவ்வாய்க்கிழமை (09) உயிரிழந்ததாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

அதே பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் சீதாதேவி (வயது 38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேற்படி பெண், அவரது வீட்டில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் எரிந்த நிலையில் நடுவீதியில் கிடந்துள்ளார்.

இதனை அவதானித்த பொதுமக்கள் அம்புலன்ஸ் மூலம்  குறித்த பெண்ணை, யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இடைநடுவில் அவர் உயிரிழந்துள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினார்கள்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .