2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 11 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் ஜே.கஜநிதிபாலன் வியாழக்கிழமை (11) உத்தரவிட்டார்.

அத்துடன், மீனவர்களின் படகு, மீன்பிடி உபகரணங்களையும் தடுத்து வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார். இந்திய மீனவர்கள் 21 பேரும் பருத்தித்துறைக்கு அண்மிய கடற்பகுதியில் வைத்து வியாழக்கிழமை (11) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்திய நாகை மாவட்டம், பூம்புகார் பகுதியை சேர்ந்த மேற்படி மீனவர்கள் சுமார் 60 அடி நீளமன படகொன்றில் வந்திருந்த வேளையிலே கைது செய்யப்பட்டனர்.

மேற்படி மீனவர்கள் யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் வியாழக்கிழமை (11) காலை ஒப்படைக்கப்பட்டனர்.தொடர்ந்து, மேற்படி மீனவர்கள் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .