2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மூர்க்கம் கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு

Gavitha   / 2014 செப்டெம்பர் 14 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன்


யாழ். தும்பளை கிழக்கு மூர்க்கம் கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) அதிகாலை ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தின் முகத்தில் காயங்கள் காணப்படுவதாகவும் இவர் சுமார் 45 வயது மதிக்கப்பத்தக்கவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

உடலில் ஆடைகள் எதுவுமற்ற நிலையிலேயே சடலம் கரையொதுங்கியுள்ளது. சடலம் அடையாளம் காணப்படவில்லை. இந்நிலையில் சடலம்  தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை (12) அதிகாலை ஊர்காவற்றுறை மண்கும்பான் பகுதியில் கரையொதுங்கிய சடலம், இந்தியா இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவரான எம்.ஞானப்பிரகாசம் என்பவருடையது என அடையாளங்காணப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தின் கைகளில் இருந்த பச்சை குத்திய அடையாளம், சடலம் ஆகியவற்றின் புகைப்படங்களை யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் ஊடாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னரே, இந்திய மீனவரது சடலம் என உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .