2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலை கணினி அறையில் திருட்டு

Thipaan   / 2014 செப்டெம்பர் 15 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ். அச்சுவேலி பத்தமேனி இரத்தினேஸ்வரி வித்தியாலயத்தின் கணினி அறையில் இருந்த 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான கணினிகளின் பாகங்கள் ஞாயிற்றுக்கிழமை (14) இரவு திருடப்பட்டுள்ளதாக, வித்தியாலய அதிபர் திங்கட்கிழமை (15) முறைப்பாடு பதிவு செய்துள்ளதார் என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

கணினி அறையின் ஓடுகளை பிரித்து உள் நுழைந்தே இந்த திருட்டு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

அதிபர் திங்கட்கிழமை (15) காலையில் பாடசாலைக்கு சென்று பார்த்த வேளையிலேயே பாடசாலையில் திருட்டுப்போன விடயம் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினார்கள்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .