2025 ஜூலை 12, சனிக்கிழமை

யாழில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 16 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ்ப்பாணம், சாட்டி கடற்கரையில் பெண்ணொருவரின் சடலமொன்று இன்று செவ்வாய்க்கிழமை (16) அதிகாலை கரையொதுங்கியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. இச்சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார் கூறினர்.

அத்துடன், பெண்களின் துவிச்சக்கர வண்டியொன்றும் கடற்கரையிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .