2025 ஜூலை 12, சனிக்கிழமை

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

George   / 2014 செப்டெம்பர் 16 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் கடந்த 2ஆம் திகதி கைது செய்யப்பட்ட 9 இந்திய மீனவர்களையும், எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், செவ்வாய்க்கிழமை(16) உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்ட 9 மீனவர்களில் ஒருவரான 15 வயது சிறுவனை, அச்சுவேலி அரச சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில் தொடர்ந்து தடுத்துவைக்குமாறும்  நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த மீனவர்கள் கடந்த 2ஆம் திகதி அதிகாலை காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இராமநாதபுரம் பகுதியில் இருந்து இரண்டு படகுகளில் வந்த குறித்த மீனவர்களின்  படகு  ஒன்று கடலில் மூழ்கிய நிலையில், எஞ்சிய ஒரு படகுடன் மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் செவ்வாய்க்கிழமை(16) வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

 இன்றைய தினம் அந்த மீனவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .