2025 ஜூலை 12, சனிக்கிழமை

முட்டைப் பொரியலுக்குள் கஞ்சா: மனைவி கைது

Thipaan   / 2014 செப்டெம்பர் 16 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருக்கும் கணவருக்கு, முட்டை பொரியலுக்குள் கஞ்சாவை மறைத்து கொடுத்த மனைவியை, திங்கட்கிழமை (15) கைது செய்ததாக, யாழ்ப்பாண பொலிஸார் செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தனர்.

சிறைச்சாலையில் இருக்கும் கணவருக்கு, திங்கட்கிழமை (15) மாலை உணவு கொடுப்பதற்காக அவரது மனைவி வந்திருந்தார்.

குறித்த பெண் கொண்டு வந்த உணவை சோதித்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர், முட்டைப் பொரியலுக்குள் கஞ்சா இருப்பதை கண்டுள்ளார்.

இதனையடுத்து, அப் பெண் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். மேற்படி பெண்ணை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .