2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

பிணையில் வெளியேறினார் கமலேந்திரன்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 16 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யோ.வித்தியா


வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சிதட தலைவர் கந்தசாமி கமலேந்திரனை பிணையில் செல்ல ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், இன்று செவ்வாய்க்கிழமை (16) அனுமதியளித்தார்.

இந்நிலையில், 2 இலட்சம் ரூபாய் காசுப்பிணை மற்றும் தலா 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில், கமலேந்திரன் விடுவிக்கப்பட்ட நிலையில் வெளியேறினார். கமலேந்திரனின் உறவினர்களில் ஒருவரே அவரை பிணையில் எடுத்தார்.

கமலேந்திரனை பிணையில் செல்ல யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் கடந்த ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி அனுமதி வழங்கினார்.

அத்துடன், வழக்கு முடிவடையும் வரையில் யாழ்ப்பாணத்தில் கமலேந்திரன் இருக்க முடியாது எனவும், வாரத்தில் ஒரு நாள், வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையொப்பமிட வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தியிருந்தார்.

பிணை வழங்கப்பட்டு இதுவரை காலமும் பிணையெடுப்பதற்கு ஆட்கள் இல்லாமல் இருந்த கமலேந்தினை அவரது உறவினர் ஒருவரே இன்று செவ்வாய்க்கிழமை (16) பிணையிலெடுத்தார்.

அத்துடன், இந்த வழக்குடன் தொடர்புடைய றெக்ஷிசனின் மனைவி அனிடா, கடந்த 9ஆம் திகதி பிணையில் விடுதலையானார்.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷிசன், கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த கொலை தொடர்பில், வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரனை 2013ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் திகதி, பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினர் கொழும்பில் வைத்து கைது செய்தனர். அத்துடன் றெக்ஷிசனின் மனைவி அனிடா மற்றும் மேலும் ஒரு இளைஞர் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கொலை தொடர்பிலான வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணை இடம்பெற்ற நிலையில், கடந்த 9 மாதங்களாக இடம்பெற்று மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கமலேந்திரன் மற்றும் அனித்தா ஆகியோரை பிணையில் விடுவிக்குமாறு கோரி கடந்த பெப்ரவரி மாதம் யாழ்.மேல் நீதிமன்றத்தில் பிணை மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த பிணை மனுவிற்கு இணங்க ஓகஸ்;ட் 29ஆம் திகதி கமலேந்திரன், அனிடா ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது. எனினும், மூன்றாவது சந்தேகநபரான இளைஞருக்கு பிணை மனு தாக்கல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .